×

குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்: பகுதி அலுவலகங்களில் இன்று நடைபெறுகிறது

சென்னை, மார்ச் 9: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டங்கள் மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில், இன்று (9ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

The post குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்: பகுதி அலுவலகங்களில் இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Drinking Water Board ,Chennai Corporation ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...